செஸ் ஒலிம்பியாட் வளாகத்தில் சுற்றித் திரிந்த பாலஸ்தீன குட்டி வீராங்கனை! யார் இந்த தேவதை!

நிலமெங்கும் போரும் ரத்தமும் பீரங்கி சத்தமும் நிறைந்த பாலஸ்தீன தேசத்தில் இருந்து ஒலிம்பியாட் போட்டியில் மிக குறைந்த வயதை சேர்ந்த 8 வயது சிறுமியான ராண்டா செடர் பங்கேற்றுள்ளார். குறும்பு தனமும், அறிவு திறனும் பெற்ற சதுரங்க சிறுமி குறித்து இத்தொகுப்பில் காணலாம். 5 வயதிலேயே அறிமுகமான சதுரங்கம்! தேசம் கடந்து, மொழி கடந்து, எல்லைகள் கடந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த சதுரங்க வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்து உள்ளனர். அதில் அனைவரையும் … Read more

பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடு இந்தியா – நிதியமைச்சர் நிர்மலா பெருமிதம்

உலகளவில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடு இந்தியாதான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் வலிமையாக உள்ளதாகக் கூறினார். “உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். கூறுகிறது. உலகின் பல நாடுகளின் வளர்ச்சி குறைந்து வருவதாகவும் மந்தமாக இருப்பதாகவும் ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. முன்பு 5% வளர்ச்சி என்று கூறியிருந்த பல நாடுகளின் வளர்ச்சிக் கணிப்பை 3% க்கும் … Read more

வீட்டில் இறந்துகிடந்த ‘அங்கமாலி டைரீஸ்’ பட புகழ் இளம் நடிகர்- தற்கொலை கடிதத்தால் அதிர்ச்சி

பிரபல மலையாள நடிகரான சரத் சந்திரன் மர்மமான நிலையில் இறந்துகிடந்த நிலையில், அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொச்சி வைட்டிலாவைச் சேர்ந்தவர் 37 வயதான சரத் சந்திரன். முதுகலையில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முடித்த இவர், முதலில் ஐடி துறையில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, டப்பிங் கலைஞராக சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்த சரத் சந்திரன், ‘Aneesya’ என்றப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து ‘koode’, ‘Comrade in … Read more

ஒலிம்பியாட் ஆன்தம் மேக்கிங் வீடியோவை பகிர்ந்த பிருந்தா மாஸ்டர்

தமிழக அரசு சார்பில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக கடந்த 28ம் தேதி பிரதமர் மோடி இந்த விழாவினை துவக்கி வைத்தார். இந்த ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒலிம்பியாட் ஆனந்தம் ஒன்றை உருவாக்கினார்கள். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ. ஆர்.ரஹ்மான் மற்றும் செஸ் போட்டி வீரர்கள் பலரும் நடித்தார்கள். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று தான் சொல்லிக் கொடுத்த மேக்கிங் வீடியோ ஒன்றை … Read more

ஹெச்டிஎப்சி அதிரடி.. வென்சர் கேப்பிடல் நிறுவனத்தை மொத்தமாக கைப்பற்றியது..!

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு கடன் சேவை நிறுவனமான HVCL என்னும் வென்சர் கேப்பிடல் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி தனது வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி-ஐ தன்னுடன் இணைக்க அனைத்து தரப்பிடமும் அடுத்தடுத்து ஒப்புதலைப் பெற்று இணைக்கும் பணிகளைச் செய்து வரும் நிலையில், நிர்வாகம் மற்றும் வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்து வருகிறது. இதன் அடிப்படையில் தான் HVCL என்னும் வென்சர் கேப்பிடல் நிறுவனத்தின் பங்குகளை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது. HVCL நிறுவனம் ஹெச்டிஎப்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட … Read more

ஆண்களா… பெண்களா? யார் வலிமையானவர்கள்? – அறிவியல் சொல்லும் உண்மைகள்…

ஆண், பெண் என்ற படைப்பு பல சிறப்புகளைக் கொண்டது, பல்வேறு காலநிலைகளைக் கடந்து மனித இனம் வலிமையாக வாழ, படைப்பில் உள்ள அறிவியல் உண்மைகள் நம்மை வியக்க வைக்கின்றன. இயற்கையில் வலிமை படைத்தவர்கள் ஆண்களா, பெண்களா… அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். DNA ஆண், பெண் பாலின வேறுபாடு குரோமோசோம்களுடன் தொடர்புடையது. மனித உடல் பல செல்களால் ஆனது. அந்த ஒவ்வொரு செல்லின் மையத்திலும் கரு உள்ளது, அதனுள் அமைந்துள்ளன மரபணு தகவல்களை வரையறுக்கும் குரோமோசோம்கள். … Read more

மக்களுக்கு என்ன தேவை என்பதை யோசித்து பிரதமர் உழைக்கிறார் – நிர்மலா சீதாராமன்

முன்னேற்றம் அடைந்த பல நாடுகளின் பொருளாதாரம் கூட இன்று பின்தங்கிய நிலைக்கு செல்லும் சூழலில், உலகளவில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இந்தியா திகழ்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் வலுவாகியுள்ளதா கூறினார். மேலும், கொரோனா தொற்று சவாலை எதிர்கொண்ட போதிலும், வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.   … Read more

காகிதம் இல்லா மன்றக் கூட்டம் நடத்திட ஐ-பேட் வழங்குக: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றத்தை காகிதம் இல்லாத மன்றமாக மாற்றி ஐ-பேட் வழங்க வேண்டும் என்று கவுன்சிலர் ஒருவர் கோரிக்கை வைத்தார். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் பூஜ்ய நேரத்தின்போது, 61-வது வார்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கவுன்சிலர் பாத்திமா அகமத் பேசுகையில், “சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்களுக்கு மடிகணினி வழங்கப்பட்டுள்ளதுபோல், இங்கும் காகிதம் இல்லா கவுன்சில் கூட்டம் நடத்த வேண்டும். கவுன்சிலர்களுக்கு லேப்–டாப் அல்லது ஐ-பேட் வழங்க வேண்டும். எங்களுக்கு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அமர்வு படியை … Read more

‘ஆபரேஷன் விஜய்’ வீரர்கள் தியாகத்திற்கு அஞ்சலி: கார்கில் மலை உச்சிக்கு ‘துப்பாக்கி மலை’ எனப் பெயர் சூட்டல்

புதுடெல்லி: இந்தியப் படைகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் “ஆபரேஷன் விஜய்”யில் பங்கேற்ற வீரர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் செக்டாரின் டிராஸில் உள்ள 5140-வது மலைக்கு “துப்பாக்கி மலை” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு, துல்லியமான துப்பாக்கிச் சக்தியுடன், எதிரி துருப்புக்கள் மற்றும் 5140- வது முனை உட்பட அவர்களின் பாதுகாப்பு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்த முடிந்தது. இது நடவடிக்கைகளை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கிய காரணியாக இருந்தது. பீரங்கி படையின் … Read more

“என்னால் பதவி விலக முடியும். ஆனால்…” – போப் பிரான்சிஸ்

ஒட்டாவா: “இன்று வரை ஓய்வுக் கதவை நான் தட்டவில்லை. என்னால் பதவி விலக முடியும். ஆனால், ஓய்வுகான அவசியம் எனக்கு தற்போது ஏற்படவில்லை” என போப் பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார். போப் பிரான்சிஸ் இந்த வாரம் தொடக்கத்தில் கனடாவுக்கு பயணம் சென்றார். அப்பயணத்தில் கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு போப் பிரான்சிஸ் தார்மிக மன்னிப்புக் கேட்டது உலக அளவில் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் தனது … Read more