'தமிழர் புறக்கணிப்பு! பொறியாளர்களுக்கான தேர்வை NLC ரத்து செய்ய வேண்டும்' – டி.ஆர்.பாலு

தமிழர்களை புறக்கணித்து விட்டு பட்டதாரி பொறியாளர்களுக்கான இடங்களை நிரப்ப நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC) நிர்வாகம் நடத்த உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வை அந்நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி வலியுறுத்தியுள்ளார். என்.எல்.சி. நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழக இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்து விட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து … Read more

மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் திடீர் தீ விபத்து

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை தயாரித்தவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். தற்போது அஜித்தின் 61வது படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் ஹிந்தியில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கும் ஒரு படத்தில் போனிகபூர் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக மும்பை அந்தேரி பகுதியில் ஒரு பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வந்ததை அடுத்து ரிகர்சல் நடைபெற்றது. அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் மின் கசிவு ஏற்பட்டதால் … Read more

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்து நாட்டைக் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு புதிய பாதையில் பயணிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இன்று (30) பிற்பகல் மல்வத்து மகாநாயக்க அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டை கட்டியெழுப்புவதற்காக அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க … Read more

திருப்பூர் || ஆம்னி பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்.!

திருப்பூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து மீது வாகன மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். நெல்லையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று இன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது குண்டடம் 4-ல் ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஆம்னி பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் ஆம்னி பேருந்து முன் பக்கம் சேதம் அடைந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த முதலிப்பாளையத்தை … Read more

ஜூ.வி செய்தி எதிரொலி: இடிந்த பள்ளிக் கட்டடங்களை நேரில் ஆய்வுசெய்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

சேலம், ஏற்காடு புளியங்கடை பகுதியில் 50 ஆண்டுகளைக் கடந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த பத்தாண்டுக்காலமாக பள்ளிக் கட்டடங்கள் மேற்கூரைகள் இடிந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் காணப்படுகின்றன. இது குறித்த செய்தி ஜூலை 30-ம் தேதி வெளியான ஜூனியர் விகடனில் “இடிந்த நிலையில் பள்ளிக் கட்டடங்கள்… இல்லம் தேடி வரும் ஆசிரியர்கள்” என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தச் செய்தியின் எதிரொலியாக இன்று காலை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்காடு … Read more

நாள் வாடகை ரூ.75,000 – கோவையில் புனரமைக்கப்பட்ட குளங்கள், மாதிரி சாலைகள் படப்பிடிப்புகளுக்கு அனுமதி

கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கோவை மாநகரப் பகுதிகளின் குளங்கள், மாதிரிச்சாலைகளில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சிக் குளம், முத்தண்ணன் குளம், செல்வ சிந்தாமணி குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்தக் குளங்களின் கரைகளை பலப்படுத்தி, புனரமைத்து, பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. … Read more

“மகாராஷ்டிர ஆளுநரின் கருத்து துரதிர்ஷ்டவசமானது; எதிர்பாராதது அல்ல” – மார்கரெட் ஆல்வா

புதுடெல்லி: “மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் எதிர்பார்க்காதது இல்லை” என்று எதிர்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மார்கரெட் ஆல்வா, தனது போட்டி வேட்பாளரான மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தன்வரையும் தாக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஷ்டிர ஆளுநரின் கருத்து துரதிர்ஷ்டவசமானதுதான்; ஆனால் எதிர்பாராதது இல்லை. குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரான, முன்னாள் மேற்கு வங்க ஆளுநரிடமிருந்து அவர் பெற்ற செய்தியான சர்ச்சை, … Read more

சர்வதேச அளவில் பிரம்மாண்ட சாதனை! மிரட்டிய நியுசிலாந்து கேப்டன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் சோஃபி டிவைன், டி20 போட்டிகளில் 2000 ஓட்டங்களுடன் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். நியுசிலாந்து-தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான காமன்வெல்த் டி20 போட்டி பெர்மிங்காமில் நடந்தது. இந்த போட்டியில் நியுசிலாந்து அணி 167 ஓட்டங்கள் எடுத்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி 154 ஓட்டங்களே எடுத்ததால் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. நியுசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் இந்தப் போட்டியில் … Read more

பலாத்கார வழக்கு : முதல் மனைவி மஞ்சு வாரியர் மீது குற்றம் சாட்டும் திலீப்

திருவனந்தபுரம் தம்மை நடிகை பலாத்கார வழக்கில் தமது முதல் மனைவி மஞ்சு வாரியர் சிக்க வைத்ததாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார். கடந்த 2017 இல் கேரளாவில் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையொட்டி நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். திலீப் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார். கொச்சி குற்றப் பிரிவு காவல்துறை தொடர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் நடிகர் திலீப்பிடம் … Read more

சுலபமாக வர்த்தகம் செய்வதை போல் சுலபமாக மக்களுக்கு நீதி கிடைப்பதும் முக்கியம் : பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : அனைவருக்கும் எளிய வழியில் நீதி வழங்கும் சட்டத்துறை கட்டமைப்புகளை ஏற்படுத்துவது அவசியமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைத்திந்திய மாவட்ட சட்ட பணி சேவைகள் ஆணைய கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பாக நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, 75வது சுதந்திர தினத்தின் அமிர்த பெருவிழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு … Read more