'ரூ.20 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு'.. பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா மீது குவியும் நெருக்கடி

பார்த்தா சாட்டர்ஜியும் அர்பிதா முகர்ஜியும் சேர்ந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. பார்த்தா சட்டர்ஜிக்கு நெருங்கிய கூட்டாளியும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 50 கோடி ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றினர். அர்பிதா முகர்ஜியின் … Read more

வந்தியத் தேவனுடன் ஆடித் திருநாள் கொண்டாட்டம்-பொன்னி நதி முதல் பாடல் எங்கே, எப்போது ரிலீஸ்?

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நாளை வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ரகுமான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஷோபிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இளவரசர் அருள்மொழிவர்மன், முதலாம் ராஜராஜ சோழனாக அரியணை … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சம்யுக்தா ஹெக்டே

தமிழில் வாட்ச்மேன், கோமாளி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு சண்டை காட்சியில் நடித்தபோது சம்யுக்தா ஹெக்டேவின் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார். தனது தந்தையுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ள சம்யுக்தா ஹெக்டே, ஒரு பதிவும் போட்டு … Read more

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் ? லிஸ் டிரஸ்சுக்கு 90 சதவீத வாய்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் :பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டியில் லிஸ் டிரஸ் வெற்றி பெற 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனில் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக பதவியேற்பார். அதையடுத்து கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. இதில் ரிஷி சுனாக் மற்றும் லிஸ் டிரஸ் இறுதிப் போட்டியில் உள்ளனர். பொருளாதார கொள்கைகள் மற்றும் வரி திட்டங்கள் … Read more

விப்ரோ செய்த வேலையைப் பாத்தீங்களா..? ஆப்பிள்-க்கு வாரி வழங்கிய இந்தியர்கள்..!!

இந்திய வர்த்தகச் சந்தையில் அனைத்து துறையிலும் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் நிலையில் அதிகப்படியான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதிலும் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஸ்மார்ட்போன் சந்தையில் அமெரிக்கா நிறுவனமான ஆப்பிள் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்துள்ளது அமெரிக்க நிறுவனங்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்திய வர்த்தக வளர்ச்சியைக் கண்டு ஆப்பிள் டிம் குக் புகழ்ந்து தள்ளியுள்ளார். அப்படி எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது… … Read more

பதுங்கி கிடக்கும் பூனை தெரியுதா? 20 செகண்ட்ல கண்டுபிடிச்சா நீங்க புலி!

Optical illusion: can you spot the cat within 20 seconds viral photo: சமீபகாலமாக ஆப்டிக்கல் இல்யூஷன் அல்லது ஒளியியல் மாயை தொடர்பான புதிர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புதிர்களின் முடிச்சுகளை அவிழ்ப்பது நமக்கு சிறந்த ஆர்வமூட்டும் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் உங்கள் ஆளுமை மற்றும் புத்திச்சாலித்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்களுக்கு இணையத்தில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த … Read more

வேலைக்கு போ என சொன்னதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

வேலைக்கு செல்ல கூறியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் வசித்து வருபவர் இஸ்ரேல். இவரது மனைவி சுனிதா.  இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரு  மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா தனது தாயுடன்  சென்னையில் வசித்து வருகிறார். டிப்ளோமோ படித்து வரும் சௌந்தர்யாவை அவரது குடும்பத்தினர் வேலைக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து … Read more

“எங்களால் நிச்சயம் மாணவர் தற்கொலைகளைத் தடுக்க முடியும்'' – உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்!

சில வருடங்களுக்கு முன்பு வரை பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியாகும்போது ஒருசில மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைப் பார்த்து வந்தோம். ஆனால், சமீப காலமாக மாணவர்களின் தற்கொலைகளை அடிக்கடி கடந்து கொண்டிருக்கிறோம். மிக சமீபத்திலும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழ்நாட்டையே உலுக்கியெடுத்து விட்டன. அதிகப்படியான படிப்புப் பளுவில் ஆரம்பித்து கல்விக்கூடங்களில் நடக்கிற பாலியல் தொல்லை வரை இதற்குப் பல காரணங்களை விரல் நீட்ட முடியும். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், ‘மாணவர்கள் … Read more

“என்எல்சியில் வட இந்தியர்களுக்கு 100% பணி… தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் துரோகம்” – திமுக காட்டம்

சென்னை: “என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தரப் பணியிடங்களில் 90 விழுக்காடு அளவு வட இந்தியர்களுக்கே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 விழுக்காடு பணிவாய்ப்பும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டிருப்பது பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. என்.எல்.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் திட்டமிட்டு துரோகம் இழைக்கும் கொடிய செயலாகும்” என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமாக கூறியுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் … Read more

கிரேன் கம்பி அறுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் கிரேன் கம்பி அறுந்ததில் 5 தொழிலாளர்கள் கீழே விழுந்து உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பாலமூரு பகுதியில் நீரேற்று பாசனத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ராட்சத கிரேன் மூலம் பம்ப் ஹவுஸ் பகுதிக்குள் தொழிலாளர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கிரேன் கம்பி திடீரென அறுந்ததில் 6 தொழிலாளர்கள் கீழே விழுந்தனர். இதில் 5 பேர் அதே … Read more