சென்னை உயர் நிதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை தொடங்கியது

சென்னை: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்னும் நிலையில் யூகங்களின் அடிப்படையில் நீதிபதி … Read more

கர்நாடகாவில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து.. 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு..!

கர்நாடகாவில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ராய்ச்சூர் மாவட்டத்தை நோக்கி சென்ற தொழிலாளர்கள் வேன், முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. தும்கூர் மாவட்டம் சிரா அருகே அதிகாலை 4 மணியளவில் நடந்த விபத்தில், வேனில் சென்ற 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் Source link

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட வழக்கில் இருந்து சீமான் விடுதலை

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட வழக்கில் இருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு நடந்த மோதல் தொடர்பான வழக்கில் ஆஜரான நிலையில் சீமான் விடுவிக்கப்பட்டார். இரு தரப்பும் சமரசம் செய்துகொண்டதால் வழக்கை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முடித்து வைத்தார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு செப்.1 வரை நீதிமன்றம் இடைக்கால ஜாமின்

பாகிஸ்தான் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு செப்டம்பர் 1 வரை நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதியை மிரட்டிய புகாரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தா நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கி பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை

டெல்லி: ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு தனது பரிந்துரையை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்தது. அதன் மூலம் ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிறது. முதலமைச்சர் ஹேமந்த் பதவி விலகி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியது.

தருமபுரி: இனம்புரியா நோயால் பிறந்தது முதல் இன்னல்களை மட்டுமே அனுபவித்துவரும் இரு சகோதரிகள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பிறந்ததிலிருந்து இனம் காணாத நோயால், வலிகளை மட்டுமே அனுபவித்து வரும் மலைக்கிராம சிறுமிகள் தங்களது நோய்க்கு நிரந்தர தீர்வு காண உயர் சிகிச்சை வழங்க முதலமைச்சர் உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளிமதுரை கிராமத்தைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த முனியன் – கமலா தம்பதியினர் சித்தேரி மலை அடிவாரத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 11 வயதான திருமலர் (கேட்கும் சவால் … Read more

காணாமல்போன காங்கிரஸ் கட்சியின் யூடியூப் பக்கம்!? தொழில்நுட்ப கோளாறா? அல்லது சதிவேலையா?

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் திடீரென மாயமானது. இதனை காங்கிரஸ் கட்சி தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக கூகுள், யூடியூப் நிர்வாகத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொழில் நுட்ப கோளாறா அல்லது சதி வேலையா என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hi, Our YouTube channel – ‘Indian National Congress’ has been … Read more

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மேலும் 3 பேர் அரெஸ்ட் – கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளகனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில், வாட்ஸ் அப் குழு மூலம் வன்முறையைத் தூண்டியதாக 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read more

பெகாசஸ் வழக்கு விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை: நிபுணர் குழு குற்றச்சாட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மேற்காசிய நாடான இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் வாயிலாக போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் அமைத்த வல்லுநர் குழு சமர்பித்துள்ள அறிக்கையில், இந்த வழக்கு விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என, 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒட்டு கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை … Read more

தியேட்டர் கிடைக்கவில்லை : விரக்தியில் மன்சூர் அலிகான்

மகன் அலிகான் துக்லக் கதாநாயகனாக நடிக்க, மன்சூர் அலிகான் தயாரித்து, இயக்கியுள்ள படம் கடமான்பாறை. நாளை வெள்ளிக்கிழமை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட இருப்பதாக அறிவித்து விளம்பரமும் செய்து வந்தார். இந்த நிலையில் ஏற்கெனவே வெளியான திருச்சிற்றம்பலம் தியேட்டரை விட்டு வெளியேறவில்லை. இன்று வெளியாகும் லைகர் படமும், நாளை வெளியாகும் டைரி படமும் மீதமுள்ள தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால் மன்சூரலிகான் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை. விளம்பரத்திற்காக 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விட்ட மன்சூரலிகான் … Read more