திட்டமிட்ட பெண் வராததால் புதையல் எடுக்கும் போட்டியில் நண்பரை நரபலி கொடுத்தேன்; கைதான காவலாளி திடுக் வாக்குமூலம்

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கெலமங்கலம் பொம்மதாதனூர் ஊராட்சி புதூர் கிராமத்தை சேர்ந்தவிவசாயி லட்சுமணன்(52). கடந்த 28ம்தேதி வீட்டின் அருகே வெற்றிலை தோட்டத்தில், ஒன்றரை அடி ஆழ குழியில் அமர்ந்த நிலையில் லட்சுமணன் இறந்து கிடந்தார். அருகே கோழி மற்றும் எலுமிச்சம் பழம் அறுக்கப்பட்ட நிலையில், பூஜை பொருட்களும் கிடந்தது. கெலமங்கலம் போலீசார், லட்சுமணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் கட்டையால் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக லட்சுமணனின் நண்பரான தர்மபுரி மாவட்டம் … Read more

அக்-02: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

டெல்லியில் அதிரடி அறிவிப்பு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருந்தால் தான் பெட்ரோல்

புதுடெல்லி: டெல்லியில் வருகின்ற 25ம் தேதி முதல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருந்தால் தான் வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 29ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்து குறித்தும் … Read more

காஸ்மெட்டிக் சர்ஜரியா? – மறுக்கிறார் பூஜா ஹெக்டே

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே விரைவில் வெளிநாடு சென்று காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொள்ளப் போவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் பூஜா ஹெக்டே. அவர் கூறுகையில், சமீப காலமாக முன்னணி நடிகர்- நடிகைகள் குறித்த ஆதாரமற்ற வதந்திகள் பரவி வருகிறது. காஸ்மெட்டிக் சர்ஜரி செய்ய வெளிநாட்டிற்கு நான் செல்லப்போவதாக ஒரு வதந்தி வைரலாகி வருகிறது. தற்போது … Read more

அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியரால் 2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் பூட்டிய ஊழியர்கள்!!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தையின் வகுப்பறையில் இருந்து அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள். பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் … Read more

வருமான வரி, வருங்கால வைப்பு நிதி தரவுகளை வழங்க வேண்டும் – நிர்மலா சீதாராமனிடம் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கு வருமானவரித் துறை மற்றும் வருங்கால வைப்பு நிதி தரவுகளை வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியைக் கோருவதற்காக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் புதுடெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் நிதிதுறை சார்ந்த பல்வேறு … Read more

மன்னர் சார்லஸ் முதல் வெளிநாட்டு பயணம்: பிரதமர் லிஸ் ட்ரஸ் அழுத்தத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதா?

COP27 மாநாட்டில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்ள மாட்டார். பிரதமர் மன்னருக்கு உத்தரவிடும் யோசனை அபத்தமானது. இந்த ஆண்டு எகிப்தில் நடைபெற உள்ள COP27 மாநாட்டில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முதல் வெளிநாட்டு பயணம் … Read more

பெரியகுளத்தில் சிறுத்தை கொலை? ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் விசாரணை நடத்தப்படும்; வனத்துறை ரேஞ்சர் தகவல்

பெரியகுளம்:  தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. அந்த இடம் ஓபிஎஸ்சின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டமாகும். இந்த தோட்டத்தில் ஆட்டுமந்தை அமைத்துள்ள பூதிபுரத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(35) என்பவரிடம் வனத்துறையினர் விசாரித்தனர். அவர் அமைத்திருந்த ஆட்டுக்கிடையில் 2 ஆடுகள், சிறுத்தைக்கு பலியானது. இதனால் சோலார் மின்வேலியில் சுருக்கு கம்பி அமைத்து சிறுத்தை கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து அலெக்ஸ் … Read more

ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கருட சேவையில் மலையப்ப சுவாமி: மூன்று லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருமலை: வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று நடந்த முக்கிய விழாவான கருட சேவையில் 3 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கி சின்ன சேஷ வாகனம், அன்னம், சிம்மம், முத்து பந்தல்,  கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் … Read more

உங்கள் கனவு நிறைவேறிவிட்டது : சாச்சியின் மனைவி நெகிழ்ச்சி

கடந்த 2020ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று டில்லியில் நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மூ அவர்கள் கையால் சாதனையாளர்கள் அனைவரும் விருது பெற்றனர். இந்த விருது வழங்கும் நிகழ்வில் ஹைலைட்டாக அமைந்தது அய்யப்பனும் கோஷியும் என்கிற படத்தில் இடம்பெற்ற கலக்காத்தா சந்திரமேரா என்கிற பாடலை பாடிய நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா விருது பெற்றபோது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றுதுதான். குறிப்பாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த, இன்று மிக உயரிய பதவி வகிக்கும் … Read more