நவராத்திரி குறித்து சர்ச்சை கருத்து: பல்கலை. பேராசிரியர் டிஸ்மிஸ்| Dinamalar

வாரணாசி: உ.பி.யில் நவராத்திரி பண்டிகை குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பல்கலை. கவுர பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். உ.பி.மாநிலம் வாரணாசியில், மகாத்மா காந்தி,காஸி வித்யாபீடம் என்ற பல்கலை.யில் அரசியல் அறிவியல் துறை கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் மிதிலேஷ் குமார் கவுதம், கடந்த செப்.29-ம் தேதி சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்தை பதிவேற்றினார். அதில் நவராத்திரி விழாவின் 9 நாட்களில் பெண்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் ஹிந்து சட்டத்தையும் … Read more

பொன்னியின் செல்வன் – அமெரிக்காவில் முதல் நாளில் ரூ.17 கோடி வசூல்

மணிரத்னம் இயக்கத்தில் உலகம் முழுவதும் நேற்று வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் முதல் நாளில் 80 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் முக்கியமாக அமெரிக்க வசூல் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். அது 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு அதிகமாகவே அமைந்துள்ளது. பிரிமீயர் காட்சிகள் மற்றும், முதல் நாள் வசூல் ஆகியவற்றைச் சேர்த்து 2 மில்லியன் யுஎஸ் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17 கோடி … Read more

கம்யூனிஸ்ட் மாநாடு: ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் செல்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு, திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ளதாகூர் தியேட்டரில் நேற்று தொடங்கியது. அக்.3 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று ‘கூட்டாட்சி மற்றும் மத்திய – மாநில உறவு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். அவருடன் கேரள முதல்வர் பினராயிவிஜயனும் பங்கேற்கிறார். மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்றுகாலை 11.30 மணிக்கு முதல்வர் … Read more

இறால் பண்ணைகளை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானதன் அடிப்படையில், தானாக முன்வந்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளை பின்பற்றி இயங்குகிறதா? என்பது … Read more

மின் ஊழியர்கள் ஸ்டிரைக் தீவிரம் மின்தடையால் இருளில் மூழ்கியது புதுச்சேரி: பொதுமக்கள் கடும் அவதி சாலை மறியலால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயத்தை கண்டித்து மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி முழுவதும் இருளில் மூழ்கியது. புதுச்சேரி அரசு மின்துறையை தனியார் மயமாக்க  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனால் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள், தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழுவினர் கடந்த 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மின்துறை ஊழியர்களின் ஸ்டிரைக் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே-சசிதரூர் நேரடி போட்டி: திரிபாதி வேட்புமனு நிராகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்படும். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. ஆரம்பத்தில் சோனியா ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சித் தலைவர் … Read more

புனேயில் பழமையான பாலம் வெடி வைத்து தகர்ப்பு| Dinamalar

புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் சாந்தினி செளக் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே புனே நகரில் சாந்தினி செளக் சந்திப்பில் மிகவும் பழமையான பாலம் உள்ளது பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பல் அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இதையடுத்து பழமையான பாலம் சுமார் 600 கிலோ வெடி பொருள் வைத்து தகர்க்கப்பட்டது. முன்னதாக மாவட்ட நிர்வாகம் பாலத்தினை … Read more

'விக்ரம் வேதா' படத்திற்கும் வாழ்த்து தெரிவிக்கும் கார்த்தி, ஜெயம் ரவி

மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படம் பான் இந்தியா படமாக தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. ஹிந்தியில் 'விக்ரம் வேதா' படமும், கன்னடத்தில் 'கண்டாரா' படமும் இப்படத்திற்குப் போட்டியாக உள்ளன. அதே சமயம் 'விக்ரம் வேதா' படத்திற்கு 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாநாயகர்களான கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் வாழ்த்து … Read more

மின்தடை – நள்ளிரவு பொதுமக்கள் சாலை மறியல்!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தொடர் மின் தடை காரணமாக நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொடர் மின் தடை நிலவி வருகிறது. புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு … Read more

அரிசி கடத்தல் | உடந்தையாகும் அலுவலர்கள்மீது கடும் நடவடிக்கை – முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் பெருங்குடி, வில்லாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடைகளில் கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.ராதாகிருஷ்ணன், “நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 35,595 நியாய விலைக் கடைகளும், மதுரை … Read more