இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடல்…

இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடலானது நேற்று (05) இரணைமடு கமக்கார அமைப்புக்கள் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தி ஜீவிகளுடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இரணைமடு நீரப்பங்கீடு தொடர்பான யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாதவாறு ஒரு தீர்க்கமான முடிவினை எட்டுவதற்கான நடவடிக்கைககளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் … Read more

“பாஜக-வுக்கு தங்கத்தட்டில் வைத்து வெற்றியை வழங்கியுள்ளார் பினராயி விஜயன்" – காங்கிரஸ் காட்டம்

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியை கைப்பற்றி கேரளாவில் கால்பதித்துள்ளது பா.ஜ.க. 74 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ்கோபி வெற்றிப்பெற்றுள்ளார். பா.ஜ.க வெற்றிபெற்றதற்கு பினராயி விஜயனும், சி.பி.எம் கட்சியும்தான் காரணம் என காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ஹசன் கூறியுள்ளார். எம்.எம்.ஹசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கு வாக்கு அதிகரிக்க காங்கிரஸ்தான் காரணம் என சி.பி.எம் கட்சியும், பினராயி விஜயனும் கூறுவார்கள். இந்த முறை அவர்கள் அதை கூறவில்லை. ஏனென்றால், சி.பி.எம் வாக்குகள்தான்  பா.ஜ.க-வுக்கு … Read more

அண்ணாமலை தோற்றதால் மொட்டை போட்டு பஜாரில் சுற்றி வந்த பாஜக நிர்வாகி!

தூத்துக்குடி: கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால் திருச்செந்தூர் அருகே பாஜக நிர்வாகி ஒருவர் மொட்டையடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி முந்திரிதோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் பாஜகவின் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு உடன்குடி ஒன்றிய பொதுச் செயலாளராக உள்ளார். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, அதே ஊரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நண்பர்களிடம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை … Read more

பஞ்சாப் – பொற்கோயில் முன்பு காலிஸ்தான் கோஷங்கள்… ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ நினைவு நாளில் அத்துமீறல்

புதுடெல்லி: பஞ்சாபின் பொற்கோயில் முன்பாக இன்று (ஜூன் 6) காலிஸ்தான் கோஷங்களுடன், ஆதரவு பதாகைகளும் ஏந்தப்பட்டன. ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ 40-வது ஆண்டு நினைவு நாளில் இந்த அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. இந்தியாவிடமிருந்து பிரிந்த பாகிஸ்தானை போல், பஞ்சாபை காலிஸ்தானாக பிரிக்க முயற்சிக்கப்பட்டது. இதை தொடக்கம் முதல் எதிர்க்கும் இந்திய அரசு, காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது. இந்நிலையில், பஞ்சாபில் இன்று ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ 40-வது நினைவுநாள் சட்டவிரோதமாக அனுசரிக்கப்பட்டது. இதையெட்டி, அமிர்தசரஸில் சீக்கியர்களின் புனித தலமான … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இல்லை? ஜெய்ஸ்வால் களமிறங்குகிறார்?

India vs Pakistan: டி20 உலகக் கோப்பை 2024ன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் துவங்கி உள்ளது. புதன்கிழமை அயர்லாந்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. நியூயார்க்கில் ஜூன் 9 தேதி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் … Read more

Yogi babu: `பேஸ்புக்கில் மலர்ந்த காதல்!' – தம்பியின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்த யோகி பாபு

உடன் பிறந்த தம்பியின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டி முன்னின்று திருமணம் நடத்தி வைத்திருக்கிறார் நடிகர் யோகி பாபு. கடந்த வாரம் செய்யாறில் நடந்த இந்தத் திருமணத்தில் யோகி பாபுவின் குடும்ப உறுப்பினர்கள் தவிர சினிமா தரப்பிலிருந்து யோகி பாபுவுக்கு நெருக்கமான சிலர் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. யோகி பாபு இந்தத் திருமணம் தொடர்பாக யோகி பாபுவின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசினோம். ”நடிகர் யோகி பாபுவின் உடன் பிறந்த தம்பி விஜயன். சினிமா இயக்குநராகும் ஆசையில் … Read more

புதிய எம் பிக்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள் : 27 பேர் தண்டனை பெற்றவர்

டெல்லி புதிய எம் பிக்களில் 27 பேர் தண்டனை பெற்று 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய பகுப்பாய்வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 மக்களவை உறுப்பினர்களில் 251 (46 சதவீதம்) பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 27 பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.  இதுவே கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது முதல் முறையாகும். … Read more

SK23: சிவகார்த்திகேயனுடன் மோதும் பாலிவுட் ஹீரோ.. அதிபயங்கரமாக உருவாகும் எஸ்கே23 பட ஆக்ஷன் காட்சிகள்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் சூழலில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், எஸ்கே 23

₹ 97,000 விலையில் வரவுள்ள பஜாஜின் சேட்டக் புரோ இ-ஸ்கூட்டரின் படங்கள் கசிந்தது

அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள மிக குறைந்த விலை பஜாஜ் சேட்டக் புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.96,000 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆக எதிர்பார்க்கப்படும் நிலையில் 5 நிறங்களை பெற உள்ள படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது. டெக்பேக் மற்றும் டெக்பேக் அல்லாத வேரியண்ட் என இரு விதமாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அர்பேன் 2024 மாடலில் இருந்து பெறப்பட்ட 2.9Kwh லித்தியம் பேட்டரி பெற்று ரேஞ்ச் 108 கிமீ  ஆகவும், டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ … Read more

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் முல்லைத்தீவு விஜயம்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு. Marc-André Franche அவர்கள் இன்றய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். மாவட்டச் செயலாளர் திரு.அ.உமா மகேஸ்வரன் அவர்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகள், மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர். திருமதி.வா.கிருபாசுதன் அபிவிருத்தி உத்தியோகத்தர். திரு.ரஜனிக்காந் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவித்தித் திட்டத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.