திருமலையில் கருட சேவை 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்| Dinamalar
திருப்பதி:திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு நடந்த கருட சேவையைக் காண, மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.திருமலையில் நேற்றிரவு, பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவையில் மலையப்ப சுவாமி எழுந்தருளி சேவை சாதித்தார். இதைக் காண, ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.காலை முதல் அனைவரும் மாடவீதியில் ‘கேலரி’ களில் காத்திருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் உணவு, குடிநீர், பால், சிற்றுண்டி உள்ளிட்டவற்றை வழங்கியது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக, … Read more