சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளை தாங்க முடியாமல் ஐபோன் ஆலையில் இருந்து ஊழியர்கள் தப்பியோட்டம் – வீடியோ வைரல்

பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஐபோன் ஆலையிலிருந்து புலம்பெயர் பணியாளர்கள் தப்பிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து சீனாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் மெக்டொனல் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: சீனாவில் செங்ஸு நகரில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் ஆப்பிளின் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கானின் பெரிய ஆலை அமைந்துள்ளது. அந்த ஆலையில் பணிபுரிந்த ஏராளமானோர் கரோனா கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி வேலியைத் தாண்டி குதித்து தப்பியோடினர். … Read more

நைட் பூரா செம மழை… சென்னையில் மிதக்கும் சாலைகள்… லீவு கூடவே வந்த எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இந்த செய்தி தீயாய் பரவ பெரு மழையை பார்க்க முடியவில்லையே? என்ற எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பதில் கிடைத்துவிட்டது. அக்டோபர் மாதத்தின் கடைசி நாளான நேற்று (31-10-2022) இரவு வெளுத்து வாங்க தொடங்கியது. இதற்கு முன்பு விட்டு விட்டு பெய்த மழையை பார்த்த மக்கள், நேற்று தான் விடாமல் கொட்டி தீர்க்கும் மழையை நடப்பு சீசனில் முதல்முறை பார்த்தனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இரவு முழுவதும் பெய்து இன்று … Read more

LPG New Rate: எல்பிஜி சிலிண்டர் விலை ரூ 115 குறைந்தது! இந்த விலைக்கு வாங்கலாம்

புதுடெல்லி: அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், நவம்பர் முதல் தேதியன்று மக்களுக்கு ஆசுவாசம் தரும் செய்தி வந்துள்ளது. வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையை அரசு குறைத்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு பணவீக்கத்திலிருந்து நிவாரணம் கொடுக்கும் வகையில், எல்பிஜி சிலிண்டர் விலை 115 ரூபாய் வரை குறைந்துள்ளது, புதிய விலைகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். வர்த்தக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் … Read more

காந்தாரா படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி!

கன்னட சினிமாவில் சாதனை படைத்த கேஜிஎப் படத்தை சமீபத்தில் வெளியான காந்தாரா படம் முறியடித்து இருக்கிறது, காந்தாரா படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.  ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்திருக்கும் இந்த படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.  இந்த படத்தில் அச்சுத் குமார், சப்தமி கவுடா, கிஷோர், தீபக் ராஜ், பிரமோத் ஷெட்டி, மானசி சுதிர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இயற்கைக்கும், மனிதர்களுக்கும் உள்ள பிணைப்பை பற்றியும், குலதெய்வம் மற்றும் … Read more

டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் ரூ.70கோடி ஹெராயின் கடத்தி வந்த வெளிநாட்டவர் கைது

டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாட்டவரிடம் இருந்து 70கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. Belize நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தோகா வழியாக விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். அவர் கொண்டு வந்திருந்த பையானது சற்று வித்தியாசமானதாக இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை சோதனை போட்டனர். அப்போது அந்த பையின் அடிப்பகுதியில் சுமார் 10 கிலோ ஹெராயின் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த பயணி கைது செய்யப்பட்டார். Source link

வடகிழக்கு பருவமழை நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,594,450 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,594,450 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 635,592,676 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 614,898,459 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,136 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காந்தாரா படப்பிடிப்புக்கு முன்பு 20 நாள் விரதம் இருந்த ரிஷப் ஷெட்டி

பெங்களூர்: காந்தாரா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு 20 நாட்கள் விரதம் இருந்தாராம் ரிஷப் ஷெட்டி. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் காந்தாரா. இந்த படம் கன்னடம் தவிர, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்து வெளியானது. இதுவரை அனைத்து மொழிகளையும் சேர்த்து ரூ.230 கோடி வசூலை ஈட்டியுள்ளது. குறிப்பாக பாலிவுட்டில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இந்த படம், மவுத்டாக் மூலம் பிரபலமாகிவிட்டது. இந்த படம் 2 வாரத்தில் வட … Read more

வீட்டுக்குள் நுழைந்த முதலை உ.பி., கிராமத்தில் பரபரப்பு| Dinamalar

எடாவா : உத்தர பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு வீட்டுக்குள் முதலை நுழைந்ததால் கிராமமே பரபரப்பானது. உத்தர பிரதேசத்தின் எடாவா அருகே உள்ள ஜைதியா கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஹர்னாம் சிங் என்பவர் வீட்டில் ஆடுகள் திடீரென கத்தின. அவரது மகள் எழுந்து விளக்கை போட்டு பார்த்த போது, ஒரு அறைக்குள் முதலை ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்தார். அந்த அறைக்குள் அவரது பாட்டி தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி … Read more