நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம்: கல்வி நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம்: கல்வி நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Source link

ஆசிரியர் பக்கம்

மின்சார வாகனங்கள் மீதான சந்தேகம் ஒரு சாராருக்கு நிறைய இருக்கிறது. மின்சார வாகனத்தை மட்டும் சார்ந்திருக்க முடியுமா என்பது அவர்களது கேள்வியாக இருக்கிறது. ஆனால், இன்னொரு சாரார் மின்சார வாகனங்களின் பக்கம் வேகமாக நகர்ந்து வருகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வாகன உற்பத்தியாளர்களும் சுறுசுறுப்பாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதே ஒரு மிகப் பெரிய தொழிலாக உருவெடுக்கும் என்று தொழில் ஆர்வலர்கள் பலரும் உணர்ந்திருக்கிறார்கள். … Read more

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை உள்பட 15 மாவட்டங்களில் கனமழையும் இன்று பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. Source link

ஆவினில் ஆயுதபூஜை, தீபாவளி இனிப்பு விற்பனை ரூ.116 கோடி – சென்னையில் மட்டும் ரூ.55 கோடி

சென்னை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில், ஆவின் நிறுவனத்தின் இனிப்பு வகைகள் ரூ.116 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் இயக்குநர் ந.சுப்பையன் கூறியதாவது: இந்த ஆண்டு 11 வகையான சிறப்பு இனிப்புவகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. சிறப்புஇனிப்பு வகைகள் 25 இடங்களில் தயாரிக்கப்பட்டு, விற்பனை நடைபெற்றது. இதுபோல, கார வகைகளும் விற்பனை செய்யப்பட்டன. ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. சென்னையில் ரூ.55 கோடி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.57 கோடிக்கு … Read more

குஜராத் பாலம் விபத்தில் நடந்தது என்ன? – உயிர் பிழைத்தவர்களின் கண்ணீர் கதை

மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு நடைபாலம் நேற்று முன்தினம் அறுந்து விழுந்தது. இதில் 141 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. பாலம் விபத்தில் உயிர் பிழைத்தவர்கள், நேரில் பார்த்த சாட்சிகள் ஊடகங்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிர் பிழைத்த ஆரிப் என்பவர் கூறும்போது, “நான், எனது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் என 8 பேர் மோர்பி தொங்கு பாலத்துக்கு சென்றோம். எனது மனைவியும் 5 வயது மகனும் சடலங்களாக மீட்கப்பட்டு … Read more

பிரான்சில் தாயாரும் இரு பிள்ளைகளும் நாய் உட்பட படுக்கையில்… தூக்கில் தொங்கிய தந்தை

தமது மகளை தொடர்புகொள்ள முடியாமல் போனதாக கூறி, அவர் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார். குறித்த தம்பதியானது விவாகரத்தின் விளிம்பில் இருந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் பிரான்சில் இரு பெண் பிள்ளைகள் மற்றும் அவர்களது தாயார் ஆகியோர் தங்கள் படுக்கையிலேயே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு பிரான்சில் உள்ள அவர்களது வீட்டில் வளர்ப்பு நாயும் இறந்த நிலையில் கிடந்தது, ஆனால் உடல்களில் எதுவும் வன்முறையின் அறிகுறிகள் … Read more

தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ-01: சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு சிரஞ்சீவி ஆறுதல்

ஐதராபாத்: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவுக்கு சிரஞ்சீவி மற்றும் தெலுங்கு பட உலகினர் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். சமீபத்தில் யசோதா படத்துக்காக டப்பிங் பேசிய சமந்தா, டிரிப்ஸ் ஏற்றியபடி பேசினார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. அப்போது தனக்கு மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் இருப்பதாக சமந்தா தெரிவித்தார். மயோசிடிஸ் பிரச்னை இருந்தால் தசைகளில் வலி இருக்கும். அடிக்கடி கீழே விழுவார்கள். நடந்தாலோ, நின்றாலோ மிகவும் சோர்வாக இருக்கும். நம் உடலில் இருக்கும் … Read more

கனமழை எதிரொலி: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக சென்னை செங்கல்பட்டு உட்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM